தினமும் 1 யூனிட் அளவுக்கு இயந்திரத்தை பயன்படுத்தாமல் மண்வெட்டி மூலமாக மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நபரைத் தவிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் ஒருவர் தினமும் ஏராளமான டாரஸ் லாரிகளில் குளத்தில் இருந்து மணல், செம்மண் ஆகியவற்றை அதி்க ஆழத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக முறைகேடாக இயந்திரங்களைக் கொண்டு எடுத்து நாகர்கோவில், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஓடு, செங்கல் தயாரிக்கும் தொழில்சாலைகளுக்கு அதிக விலைக்கு விநியோகம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. குளத்தில் இருந்து முறைகேடாக மண் எடுப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவி்த்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சேரன்மகாதேவி கோட்டாட்சியரிடம் விவசாயிகள், பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.